எமது பள்ளி நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு விட்டமையால் நான் வேறு பள்ளிக்கு மாறுதல் மூலம் செல்லும் நிலையில் கொட்டுகாரம்பட்டி பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட வழியனுப்பு விழா என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஆம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்,பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உராட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் ஒருமித்து பள்ளிக்கு வந்து என்னைப் பாராட்டி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்தமை என்பது இதுநாள் வரையில் ஆற்றிய கடமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதில் மிகவும் குறிப்பிட வேண்டிய சிறப்புச் செய்தி இவ்வூரில் பள்ளி துவங்கி 52 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் இதுவரையில் எந்த ஆசிரியருக்கும் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பெறவில்லை என்பதே, எனவே கடமை எங்கு சரியாக நிறைவேற்றப்படுகிறதோ அங்கு அதற்கான மரியாதை கட்டாயம் கிடக்கும் என்பது உறுதி.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
Thursday, December 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)
அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி
-
இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...
-
ஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...
-
தமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...
-
இன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...
-
இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...
வாழ்த்துக்கள்!!!
ReplyDelete// கடமை எங்கு சரியாக நிறைவேற்றப்படுகிறதோ அங்கு அதற்கான மரியாதை கட்டாயம் கிடக்கும் என்பது உறுதி.
உண்மை!!!