Wednesday, October 28, 2009

சர்வதேச கைகள் கழுவும் நாள்.









ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளியில் இன்று சர்வதேச கைகள் கழுவும் நாள் கடைபிடிக்கப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவர்களின் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று மீள பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள் கைகள் சோப்பு போட்டுக் கழுவுவதன் முக்கியத்துவம் மற்றும் கிராமச் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான வாசகங்களைமுழங்கினர்.
பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சர்வதேச கைகள் கழுவும் நாள் தொடர்பான செய்திகளையும், அதன் முக்கியத்துவத்தையும், சரியான கைகள் கழுவும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறினார்.
அதன் பின்னர் பள்ளி மாணவர்கள் சரியான கைகள் கழுவும் முறையை செய்முறை விளக்கம் மூலமாக மாணவர்களுக்கு செய்துக் காட்டினர்.

காண்போம் கற்போம்


காண்போம் கற்போம் நிகழ்சியைக் காணும் பள்ளி மாணவர்கள்.......

சுகாதார விழிப்புணர்வுப் போட்டி.
ஊத்தங்கரை ஒன்றிய அளவிலான சுகாதாரப் போட்டிகள் நடைபெற்றது. சுகம் தரும் சுத்தம் என்ற தலைப்பில் பேச்சு,கட்டுரை,ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. ஒன்றியஅளவில் 21 பள்ளிகள் பங்கு பெற்ற இப்போட்டிகளில் கொட்டுகாரம்பட்டிநடுநிலைப் பள்ளி மாணவி சு.பிரியா கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும், மு.தங்கவேல் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்று ஒன்றிய அளவில் சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன் மற்றும் உதவி ஆசிரியர்கள் சி.சிவா, சே.லீலாகிருஷ்ணன், சி.தாமரைச் செல்வி ஆகியோரும் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களும் பாராட்டினர்

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி