Friday, September 24, 2010

அண்ணா பிறந்த நாள் விளையாட்டுப் போட்டிகள்



பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்குபெற்று அதிக எண்ணிக்கையிலான பரிசுகளைப் பெற்றனர்.                    
             சதுரங்கப் போட்டியில் ஜூனியர் ஆண்கள், சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் ஜூனியர் பெண்கள், சப் ஜூனியர் பெண்கள் ஆகிய   அனைத்து பிரிவுகளிலும் எமது பள்ளி மாணவர்களே முதலிடம் பெற்று பரிசுகளை வென்றுள்ளனர். மேலும் ஜூனியர் மகளிர் வளைப் பந்து போட்டியில் முதலிடமும்,  ஜூனியர் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், சப் ஜூனியர் பெண்கல் கேரம் போட்டியில் முதலிடமும், ஜூனியர் ஆண்கள் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பெற்றனர்.     










ஓசோன் தினம்



எமது பள்ளியில் தேசியப் பசுமைப் படை மூலம் ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது. அப்போது மாணவர்கள் புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாசகங்களை முழங்கி வந்தனர்.
           பின்னர் பள்ளி வளாகத்தின் உள்ளே மற்றும் பள்ளி வளாகத்தின் வெளியே மரக் கன்றுகள் நடப்பட்டது.


பள்ளிச் சிறார் மருத்துவ முகாம்



எமது பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் சிங்காரப்பேட்டை அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் திருமதி. உஷாதேவி அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவப் பரிசோதணை மேற்கொண்டனர். அப்போது 1 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் விட்டமின் ஏ மருந்து அளிக்கப்பட்டது. மேலும் சிறு உடல்நலக் குறை கண்ட மாணவர்களுக்கு மாத்திரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது, இரண்டு மாணவர்கள் மேல் சிகிட்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.



அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி