Monday, March 28, 2011

நலமாய் வாழக் கற்றுக் கொள்வேன் - கற்றுக்கொடுப்பேன்


எமது பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான “நலமாய் வாழக் கற்றுக் கொள்வேன் - கற்றுக் கொடுப்பேன்” எனும் தலைப்பிலான பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் துவங்கிய இம்முகாமில் பள்ளி மாணவர்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வும், எளீய மருத்துவச் சிகிட்சை முறைகளும் குறித்த பல்வேறு கருத்துக்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது மாணவர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். பின்னர் பள்ளி மாணவர்கள் தத்தமது உயரம் அதற்கேற்ற உடல் எடைபற்றி அறிந்துக்கொண்டனர். அதற்கென பள்ளியில் வாங்கி வைக்கப்பட்டுள்ள எடைக் கருவி, உயரம் அளந்திடும் அளவுகோள் ஆகியவற்றை மாணவர்களே பயன்படுத்தி தமது அளவீடுகளை அறிந்ததோடு மற்ற மாணவர்களின் அளவீடுகளையும் அளந்து கூறியது பயனுடையதாய் அமைந்தது. இப்பயிற்சியின் பொருப்பாசிரியரான திருமதி சி.தாமரைச்செல்வி அவர்கள் அனைத்து மாணவர்களையும் ஒருங்கினைத்து அவர்களுக்குத் தேவையான மருத்துவக் குறிப்புகளையும், பிற ஆலோசனைகளையும் கூறினார். இப்பயிற்சிக்கென பள்ளியில் முதலுதவிப் பெட்டி, வீட்டு மருத்துவம் தொடர்பான இயற்கை மருத்துவப் பொருட்கள் அடங்கிய பெட்டி ஆகியன பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.









அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி