Tuesday, August 28, 2012

பாராட்டு விழா........


இன்று 26.08.2012 ல் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் மனித நேயக் கருத்தங்கமும், திரு.வி.க. படத்திறப்பும் கவி.செங்குட்டுவன்(எ) செ. இராஜேந்திரன் ஆகிய எனக்கு பாராட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமிஅவர்கள் தலைமை தாங்கினார். திரு செ.சிவராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விழா அறிமுக உரையை திரு ஆடிட்டர் இராசேந்திரன் அவர்கள் ஆற்ற வாழ்த்துரையை திருவாளர்கள் மருத்துவர் அருண் தேவராசு, ச. ஞானசேகரன், வி.ஜி. இளங்கோ, தணிகை ஜி. கருணாநிதி, ஆகியோர் வழங்கினர். பின்னர் திரு பழ. வெங்கடாசலம் அவர்களின் பாராட்டு உரைக்கு பிறகு எனக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதன் பின் நான் ஏற்புரை வழங்கினேன்.

பின்னர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் படத்தை அதியமான் மகளிர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் செல்வி பிச்சை.முத்துஇலட்சுமி அவர்கள் திறந்து வைத்து அவரைப் பற்ரி கருத்துரை வழங்கினார்.அதன் பின்னர் ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு க.சிராஜுதீன் அவர்கள் யார் மனிதன்? என்ற தலைப்பில் மனித நேய கருத்தரங்க கருத்துரை ஆற்றினார்.

இறுதியில் ஜோ.ஈ.வெரா. திருப்பதி நன்றி கூறினார். விழா ஒருங்கமைப்புப் பணியை பழ. பிரபு அவர்கள் திறம்பட செய்தார்.
















Friday, August 24, 2012

வாருங்கள்… வாழ்த்துங்கள்……


ஊத்தங்கரையில் இயங்கி வரும் விடுதலை வாசகர் வட்டம் என்ற அமைப்பு மாதம்தோறும் ஓர் நிகழ்வை நடத்தி வருகிறது. அதில் அந்தந்த மாதத்தின் சிறப்பு நாட்கள் மற்றும் சிறப்பாளர்களின் பிறந்த நாட்களை அடிப்படையாக வைத்து கருத்தரங்குகளும், படத் திறப்பும், ஊரின் சிறந்த சாதனையாளர்களை அடையாளம் காட்டிடும் வகையில் மாதம் ஒருவரைத் தேர்வு செய்து அவருக்கு பாராட்டு விழாவும் நடத்துகிறது. அவ்வகையில் இம்மாதம் 19.08.2012 உலக மனிதநேய நாள் ஆதலால், உலக மனித நேயக் கருத்தரங்கமும், 26.08.2012 திரு.வி.க. பிறந்த நாள் ஆகையால், தமிழ்த் தென்றல் திரு.வி.க படத்திறப்பும் கவி.செங்குட்டுவன் ஆகிய எனக்கு பாராட்டு விழாவும் வரும் 26.08.2012 ஞாயிறு அன்று நடத்த உள்ளனர். எனவே அவ்விழாவில் அனைவரும் பங்கு பெற்று விழாவினைச் சிறப்பிக்கவும், என்னை வாழ்த்திடவும் அன்புடன் வேண்டுகிறேன். அழைப்பு இணைத்துள்ளேன்.

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி