Sunday, August 15, 2010

இந்திய சுதந்திரத் திருநாள் விழா



    இன்று இந்திய சுதந்திர திருநாள் விழா எமது பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராசன் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம், துணைத் தலைவர் கே.எம்.எத்திராசு உள்ளிட்ட பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் கலந்துக்கொண்டனர்.
    விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.











































சிறந்த ஆலோசகர் விருது.

                 கிருஷ்ணகிரி மாவட்ட செஞ்சிலுவச் சங்கம் சார்பில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களின் ஊர்வலத்தோடு துவங்கிய விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு வி. அருண்ராய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு பி. மூர்த்தி, மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) திரு எம்.பாஸ்கர், மாவட்டக் கல்வி அலுவலர் திரு எஸ்.மார்ஸ், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கண்வீனர் திரு சி.செங்குட்டுவன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
    இவ்விழாவில் இப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு இளைஞர் செஞ்சிலுவைச் சங்க சிறந்த ஆலோசகர் விருது (JUNIOR REDCROSS BEST COUNSELLOR AWARD) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.இவ்விருது இதுவரையில் உயர்/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழ்ங்கப்பட்டு வந்த நிலையில் முதண்முறையாக தற்போதுதான் ஓர் நடுனிலைப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






















அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி