எமது பள்ளி உயர் துவக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தமிழக அரசால் தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து இன்று (15.12.2012)புதிய பள்ளியின் துவக்க விழா இனிதே நடைபெற்றது. விழா தற்போதைய உயர் துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி துவக்க விழாவிற்கான சிறப்பு பூசை நடைபெற்றது. பின்னர் புதிய பள்ளியின் பொருப்பாசிரியர் திருமதி சி. தாமரைச்செல்வி அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.பின்னர் தற்போதைய பள்ளியின் தலைமை ஆசிரியரின் தலைமை உரையில் இன்றைய புதிய பள்ளி துவக்கத்திற்கான பல்வேறு கடந்த காலச் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக வளர்ச்சி கண்டு, மாணவர்களுக்கான தங்கும் விடுதியோடு செயல்பட வேண்டுமென தமது வாழ்த்தைக் கூறினார். அடுத்து பேசிய புதிய உயர்நிலைப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் திரு டி. சீனிவாசன் அவர்கள் புதிய பள்ளி எவ்வாரெல்லாம் செயல்பட வேண்டுமெனக் கூறினார். பின்னர் தற்போதைய மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் கிராமக் கல்விக் குழுத் தலைவருமான திருமதி உஷாராணி குமரேசன், முன்னாள் தலைவர்கள் திரு இராதா நாகராசன், திரு வி. மாதவன்,மற்றும் உராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் வாழ்த்துரக்குப் பின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. விழாவில் புதிய பள்ளிக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
Friday, December 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி
-
இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...
-
ஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...
-
தமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...
-
இன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...
-
இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...
No comments:
Post a Comment