Wednesday, March 31, 2010

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் பாராட்டு

                                   கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.எம்.கே.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (30.03.2010) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எமது பள்ளிக்கு வந்து பார்வையிட்டார். அது போழ்து அவர் ஒன்று முதல் எட்டு வரையிலான அனைத்து வகுப்பு மாணவர்களையும் வகுப்பு வாரியாக சோதித்தார். பின்னர் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுபுற தூய்மையைக் கண்டும், பள்ளியில் மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்ச் செடிகளைக் கண்டும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
                     பள்ளிக்கென தனியே நடத்தி வரும் இணைய வலைப்பூ பற்றி ஆர்வத்தொடு அறிந்து  மகிழ்ந்தார். பார்வையின் போது அவர் தெரிவித்த ஊக்க மொழிகளும், ஆலோசனைகளும் எமது பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் பயன்படும். அவருக்கு எமது பள்ளியின் சார்பிலான நன்றிகள்.


4 comments:

  1. now only i know ur site. pl visit my site for educational article and u can post ur comment. thanks for sharing. http://veeluthukal blogspot. com

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,
    மிக்க மகிழ்ச்சி.உங்கள் பணி சிறக்கட்டும்.இனிதே உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி