Wednesday, March 31, 2010

உலக தண்ணீர் தினம் !

கொட்டுகாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.
                       பள்ளித் தலைமையாசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஊத்தங்கரை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் திரு எம்.நவீந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
          விழாவில் இன்றைய உலகில் தண்ணீரின் அவசியம் பற்றியும் அதை பாதுகாப்பாகவும்,சிக்கனமாகவும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. பின்னர் தண்ணீரின் பயன்பாடு குறித்த உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான் விழிப்புணர்வை ஊட்டும் பாடல்கள் மற்றும் கதைகள் கூறப்பட்டது.
விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் ஊத்தங்கரை கிளையின் மூலம் பெண்குழந்தைகள் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு வங்கி மேலாளர் காசோலை வழங்கினார்.

3 comments:

  1. பதிவு நன்று..

    தண்ணீர் பஞ்சம் அதிகளவு இருக்கும் ஊத்தங்கரை பகுதியில் தண்ணீர் தினம் பற்றிய விழிப்புணர்வு இருப்பது அவசியம்தான்.

    அது சரி தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் பகுதிக்கு ஊத்தங்கரை என்ற பெயர் வந்தது ஏனோ ?

    ReplyDelete
  2. கவிதைக்காரர்களுக்கு ஒரு சவால்...

    "நான் இறந்துப் போயிருந்தேன்..."
    இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...

    நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
    இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
    இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
    தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..

    உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
    என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
    அல்லது

    உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....

    முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
    Start MUSIC.......

    ReplyDelete

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி