கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.எம்.கே.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (30.03.2010) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எமது பள்ளிக்கு வந்து பார்வையிட்டார். அது போழ்து அவர் ஒன்று முதல் எட்டு வரையிலான அனைத்து வகுப்பு மாணவர்களையும் வகுப்பு வாரியாக சோதித்தார். பின்னர் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுபுற தூய்மையைக் கண்டும், பள்ளியில் மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்ச் செடிகளைக் கண்டும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பள்ளிக்கென தனியே நடத்தி வரும் இணைய வலைப்பூ பற்றி ஆர்வத்தொடு அறிந்து மகிழ்ந்தார். பார்வையின் போது அவர் தெரிவித்த ஊக்க மொழிகளும், ஆலோசனைகளும் எமது பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் பயன்படும். அவருக்கு எமது பள்ளியின் சார்பிலான நன்றிகள்.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
Wednesday, March 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி
-
இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...
-
ஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...
-
இன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...
-
தமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...
-
இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...
மகிழ்ச்சி !!
ReplyDeleteWord Verification - நீக்கலாமே ??
ReplyDeletenow only i know ur site. pl visit my site for educational article and u can post ur comment. thanks for sharing. http://veeluthukal blogspot. com
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.உங்கள் பணி சிறக்கட்டும்.இனிதே உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.