Sunday, July 11, 2010

2010-11 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கொட்டுகாரம்பட்டியில் 2010 - 11 கல்வி ஆண்டுக்கான  மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி 09.06.2010 -ல் நடைபெற்றது. பேரணிக்கு  ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு அ.வீ. விஜயகுமாரன் அவர்கள் தலைமை தாங்கினார். ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி இரா.மனோகரி அவர்கள் பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணி பள்ளி கிராமத்தின் பல பகுதிகளையும் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் ஆசிரியர்களும், மாணவர்களும் கல்வி விழிப்புணர்வு தொடர்பான முழக்கங்களையும், பள்ளிச் செல்லாக் குழந்தைகள் பள்ளிச் செல்ல வேண்டிய அவசியம் குறித்த முழக்கங்களையும் முழங்கி வந்தனர். பேரணி முடிவில் மூன்று குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.





No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி