ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளி
கொட்டுகாரம்பட்டி – ஊத்தங்கரை
ஒன்றியம்.
கிராமக் கல்விக் குழுக் கூட்ட
முடிவுகள்.
இன்று 24.06.2011
இப்பள்ளியின் கிராமக் கல்விக் குழுக் கூட்டம் அதன் தலைவரும், மூன்றம்பட்டி
சிற்றூராட்சி மன்றத் தலைவருமான திருமதி நா. இராதா நாகராஜன் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. கூட்டத்தில் முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியரும் கிராமக் கல்விக் குழுச்
செயலாளருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளியின் தற்போதைய
வளர்ச்சி நிலைகள் பற்றியும், எதிர்காலச் செயல் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
பின்னர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்ட குழு உறுப்பினர்களின்
கருத்துரைக்கு பின் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1.
நமது
பள்ளியை மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் சிறந்த பள்ளியாகச் செயல்படுத்தி வரும்
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து உதவி ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத்
தெரிவிப்பதோடு இனி வருங்காலங்களில் பள்ளி வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் மேற்கொள்ளும்
எல்லா நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை தரவும் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் : 2.
இப்பள்ளி
மாணவர்களின் இணைய வழிக் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் வகையில் பள்ளிக்கு
அகன்ற கற்றை இணைய இணைப்பு கிராமக் கல்விக் குழு மூலமாகப் பெற்றுத் தருவதென முடிவு
செய்யப்படுகிறது.
தீர்மானம் : 3.
இவ்வாண்டுக்கு
அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் பள்ளிக்கு வழங்க உள்ள பள்ளி மானியத் தொகையில்
கீழ்க் கண்ட செலவினங்கள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்படுகிறது.
1. 1 முதல் 5 வரை பயிலும்
மாணவர்கள் அமர பாய்கள் மற்றும் செயல் வழிக் கல்விக்கான டிரேக்கள் வாங்குதல்.
2. ஆரோக்கியச் சக்கரப்
பொருட்கள் வாங்குதல்.
3. செயல்வழிக் கற்றலுக்கான உள்/வெளி
விளையாட்டுப் பொருட்கள் வாங்குதல். மற்றும் சிலந்தி அட்டைச் செயல்பாட்டுக்கான
சோதனைப் பொருட்கள் வாங்குதல்.
4. 6 முதல் 8 வகுப்பு
மாணவர்களுக்கான வரைபடங்கள் மற்றும்
அறிவியல் சோதனைப் பொருட்கள் வாங்குதல்.
5. விளையாட்டுப் பொருட்கள்
வாங்குதல்.
6. புதிதாக ஓர் மின் விசிறி
வாங்குதல்
7. பழுதான மின்
விளக்குகளுக்கு மாற்றாக புதிய மின் விளக்குகள் வாங்குதல்.
8. பழுதான தொலைக் காட்சிப்
பெட்டி மற்றும் டிவிடி அகியவற்றை பழுது நீக்குதல்.
9. பள்ளிக்குத் தேவையான
வெள்ளை மற்றும் வண்ணச் சுண்ணக் கட்டிகள் வாங்குதல்.
தீர்மானம் : 3.
அனைவருக்கம்
கல்வித் திட்டம் மூலம் வழங்கப்படும் பள்ளி பராமரிப்பு மானியத்தில் கீழ்க் கண்ட
செலவினங்கள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்படுகிறது.
1. குடிநீர் மற்றும் கழிவறை
குழாய்கள் பழுது நீக்குதல்.
2. பழுதடைந்துள்ள கழிவறைக்
கதவுகளை புதிதாக மாற்றுதல்.
3. பள்ளிக் கட்டிடங்கள் 3
க்கு வெள்ளை அடித்தல் மற்றும் கதவு சன்னல்களுக்கு வர்ணம் அடித்தல்.
4. தாழ்நிலை மற்றும் மேல்நிலைக்
கரும்பலகைகளுக்கு வர்ணம் அடித்தல்
5. தோட்டப் பயன்பாட்டுக்கான
மண்வெட்டி, செடிகளைக் கத்தரிக்கும் கத்தரி மற்றும் மருந்துப் பொருட்கள் வாங்குதல்.
6. பள்ளிப் பெயர்ப் பலகை,
இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் பெயர்ப் பலகை, சுற்றுச் சூழல் மன்றம் பெயர்ப் பலகை
ஆகியவற்றை எழுதுதல்.
இறுதியில்
பள்ளி உதவி ஆசிரியர் திரு பி. பாண்டுரங்கன் அனவருக்கும் நன்றி கூறினார்.
கூட்டத்தில்
பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும்
கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment