Friday, April 15, 2011

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் சிறந்த மேற்பார்வையாளருக்கான பாராட்டு.

    பள்ளித் தலைமையாசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு வி அருண்ராய் அவர்கள் பரிசளிக்கும் காட்சி. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சி.பிரகாசம் மற்ரும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்.

               கடந்த 1 சூன் 2010 முதல் 28 பிப்ரவரி 2011 வரையில் நமது இந்திய நாடு முழுமையும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்பணி மிகத்தீவிரமாக நடைபெற்றது. எமது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அப்பணி இரண்டு கட்டங்களாக மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
                   இப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் ஆகிய எனக்கு வழங்கப்பட்டது. சிறந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்பணி மேற்பார்வையாளர்   என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரால் அறிவிக்கப்பட்டு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி