ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
Sunday, August 15, 2010
இந்திய சுதந்திரத் திருநாள் விழா
இன்று இந்திய சுதந்திர திருநாள் விழா எமது பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராசன் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம், துணைத் தலைவர் கே.எம்.எத்திராசு உள்ளிட்ட பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் கலந்துக்கொண்டனர்.
விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறந்த ஆலோசகர் விருது.
கிருஷ்ணகிரி மாவட்ட செஞ்சிலுவச் சங்கம் சார்பில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களின் ஊர்வலத்தோடு துவங்கிய விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு வி. அருண்ராய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு பி. மூர்த்தி, மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) திரு எம்.பாஸ்கர், மாவட்டக் கல்வி அலுவலர் திரு எஸ்.மார்ஸ், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கண்வீனர் திரு சி.செங்குட்டுவன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
இவ்விழாவில் இப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு இளைஞர் செஞ்சிலுவைச் சங்க சிறந்த ஆலோசகர் விருது (JUNIOR REDCROSS BEST COUNSELLOR AWARD) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.இவ்விருது இதுவரையில் உயர்/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழ்ங்கப்பட்டு வந்த நிலையில் முதண்முறையாக தற்போதுதான் ஓர் நடுனிலைப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் இப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு இளைஞர் செஞ்சிலுவைச் சங்க சிறந்த ஆலோசகர் விருது (JUNIOR REDCROSS BEST COUNSELLOR AWARD) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.இவ்விருது இதுவரையில் உயர்/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழ்ங்கப்பட்டு வந்த நிலையில் முதண்முறையாக தற்போதுதான் ஓர் நடுனிலைப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி
-
இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...
-
ஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...
-
தமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...
-
இன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...
-
இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...