Tuesday, January 19, 2010

பொங்கல் ஊரக விளையாட்டுப் போட்டிகள்


மூன்றம்பட்டி ஊராட்சி அளவிலான பொங்கல் ஊரக விளையாட்டுப் போட்டிகள் 12.01.2010 அன்று ஊராட்சி ஊரக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் இவ் ஊராட்சியைச் சேர்ந்த 4 பள்ளிகளின் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். அதில் எமது பள்ளி மாணவர்கள் தனி நபர் விளையாட்டில் 6 முதல் பரிசுகளையும் 3 இரண்டாம் பரிசுகளையும், குழு விளையாட்டில் 1 முதல் பரிசையும் 1 இரண்டாம் பரிசையும் பெற்று ஒட்டு மொத்த பரிசுகளில் அதிக பரிசுகள் பெற்ற பள்ளியாக சாதனை படைத்துள்ளனர். அதன் விபரம் பின் வருமாறு..... மு. தங்கவேல்..... ஜுனியர் ஆண்கள் சதுரங்கம் முதல் பரிசு. தி. பிரபு...... ஜுனியர் ஆண்கள் சதுரங்கம் இரண்டாம் பரிசு. சு. பிரியா....ஜுனியர் பெண்கள் சதுரங்கம் முதல் பரிசு. மு. கங்காதரன்.... சப்ஜுனியர் ஆண்கள் சதுரங்கம் இரண்டாம் பரிசு. க.வெண்ணிலா... சப் ஜுனியர் பெண்கள் சதுரங்கம் முதல் பரிசு. மு.வசந்தகுமார்.... சப் ஜுனியர் ஆண்கள் கேரம் முதல் பரிசு. கி. நர்மதா.....சப் ஜுனியர் பெண்கள் கேரம் முதல் பரிசு. இரா. திருப்பதி.... ஜுனியர் ஆண்கள் நீளம் தாண்டுதல் முதல் பரிசு. தி. இளவரசன்.....சப் ஜுனியர் ஆண்கள் 100 மீட்டர் ஒட்டம் முதல் பரிசு. த. அனிதா, இரா. பவித்ரா ஆகியோர் ஜுனியர் வலைப் பந்து போட்டியில் முதல் பரிசும், தா. இளமதி, கோ. பாரதி ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்றனர்.

No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி