Friday, December 18, 2009


இன்று(18.12.2009 )  ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இணையப் பயிலரங்கம் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது.பள்ளித்தலைமையாசிரியர் திரு பி.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.திரு.கவி.செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.உதவித் தலைமையாசிரியர்கள் திருவாளர்கள் எம்.சி.செயபால், ஆர்.தருமலிங்கம், கே.வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பயிலரங்கை புதுவை பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அவர்கள் திரம்பட நடத்தினார். மாணவர் மனநிலை அறிந்து அவர்களுக்கேற்ற எளிய தமிழில் நடத்திச் சென்றமை வரவேற்புக்குறியது.
இப்பயிலரங்கில் கணிப்பொறித்துறை சார்ந்த தமிழ் மாணவர்கள் 100 பேர் தமிழ் இணைய அறிமுகம் பெற்றனர். தமிழ்த்தட்டச்சு,கூகுள் நிறுவனப்பயன்பாடு, மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அறிமுகம் பெற்றனர். மின்னிதழ்கள் உள்ளிட்ட பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.
கணிப்பொறி ஆசிரியர் கே.பி.உமாமகேசுவரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.









No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி