கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஊத்தங்கரை ஒன்றிய வள மேற்பார்வையாளர் திரு.அ.வி.விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.விழாவில் ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு, கோவிந்தராஜ், கிராமக் கல்விக் குழுத்தலைவர் திரு இராதா நாகராஜ்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு திருவேங்கடம்,துணைத் தலைவர் திரு எத்திராஜ்,செயற்குழு உறுப்பினர் துரு முருகன் உள்ளிட்ட பெற்றோர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.மேலும் ஒன்றிய அளவில் நடைபெற்ற கட்டுரை,பேச்சுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைப் பெற்ற சு.பிரியா,மு.தங்கவேல் ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு சே.லீலாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
Saturday, November 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி
-
இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...
-
ஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...
-
தமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...
-
இன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...
-
இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...
No comments:
Post a Comment